பின்குறிப்பிடுவதே வழக்கமாயினும் இங்கே முன்குறிப்பிடுவதன் காரணமே யாரும் இந்த பதிவை அவர்கள் மீதோ. அவர்கள் வாழ்க்கை குணங்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று நினைக்கக்கூடாது என்பதே 😀 இவை முழுக்க முழுக்க என் கருத்துக்களே அன்றி நாளை அனைவருக்கும் இவ்வாறே நடக்கும் என்பதல்ல.
என்னடா இவன் ‘பாவ மன்னிப்பு’ திரைப்படத்தில் வரும் பாடலை தவறாக பாடுகிறானோ என்று நினைப்பீர்களாயின், தவறு தொடர்ந்து படிக்கவும்.
என்னை போன்ற ஐக்கிய அமெரிக்கா’வில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் கண்டதே/கேள்விப்பட்டதே இது. பணத்தின் அருமையும் அதை அடைய பெற்றோர்கள் பட்ட பாடுகளை அறியாதோர் / பணத்துக்கு கவலை இல்லாதோர் மத்தியில் வாழும் பொழுது இந்த நிலைமை மேலும் மோசம் என்பதை மறுக்க இயலாது.
இது இந்த நாட்டில் வந்து இறங்கியது முதல் இன்று வரை தொடரத்தான் செய்கிறது. நான் வாழும் நகரத்திலோ அனைத்து பொருட்களின் விலையும் மற்ற அனேக நகரங்களை விட அதிகம், அதற்காகவே பெயர் பெற்றது 😦
இப்படிப்பட்ட ஒரு நகரத்தில் வாழ்வது மாணவர்களுக்கு எவ்வளவு கடினம் என்று உங்களால் உணர முடியும் என்று நம்புகிறேன்.
இதனால் தான் அமெரிக்க அரசாங்கம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறு பணிகளில் சேர்ந்து தங்கள் அன்றாட செலவுகளுக்கு திரவியம் ஈட்ட அனுமதிக்கிறதோ ஏனோ !?. முன்னே கூறியது போல், என்னுடைய நிலைமை மோசமாக இருக்கவில்லை, நான் ‘புதியர்களுக்கு உதவி செய்வது’, ‘பெற்றோரை எதிர்பார்க்காமல் தன் காலில் முயன்ற வரை நிற்பது’ போன்ற ஒரு சில முடிவுகளை எடுக்கும் வரை.
தங்கள் மனநிலை எங்ஙனம் இருக்குமோ அறியேன், என்னால் கொடுத்த வாக்கை கடைபிடிக்காதவர்களை நல்லதோர் கண்ணோட்டத்துடன் காண இயலவில்லை. புதியவர்களுக்கு உதவுவது என்னும் பொழுது, இதுவரை அறிமுகம் இல்லாத, ஆயினும் என்னுடைய பல்கலைகழகத்தில் கற்க இந்தியாவில் இருந்து வரும் ஒருவரை குறிப்பிடுகிறேன்.
தாங்கள் அறிந்தவை எங்ஙனம் இருக்கின்றது என்று எனக்கு தெரியாது, ஆனால் இங்கே (போஸ்டன்’இல்) மாணவர்கள்(பணம் ‘அதிகமாக’ செலவு வசதி இல்லாதவர்கள்) பாடு கடினம், அதுவும் புதியதாக வருபவர்கள் நிலைமை இன்னும் மோசம். அதனால் தான் அந்த நபர் என்னை அணுகிய போது அவருக்கு ஓரிடம் ஏற்பாடு செய்ய சம்மதித்தேன். இதே நேரத்தில், என்னுடைய நண்பர்கள்(நாங்கள் இப்பொழுது ஒரே வீட்டில் இருக்கின்றோம்) வேறொரு வீடு தேடும் விபரத்தை அறிந்தேன். அவர்கள் என்னையும் கேட்டபோழுதும் என்னால் வீடு மாற முடியாததற்கான காரணம் ‘பணம்’. குடியிருக்கும் வீட்டுக்கு கொடுத்த கடைசி மாத வாடகைப்பணத்தை இழக்க வேண்டும், புதிய வீட்டிற்கு செல்வதற்கு முன் 3 மாத வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும். இதற்கு செலவு செய்வதென்பது என்போலுள்ளவர்களுக்கு மிக கடினம். இப்பொழுதுள்ள நிலைமையில் மாத வருமானத்தில் மிச்சம் பிடிப்பதை வைத்து அடுத்த தடவை பல்கலைக்கழகத்துக்கு தேவையான பணத்தை கட்டுகிறேன்(‘பெற்றோரை எதிர்பார்க்காமல் தன் காலில் முயன்ற வரை நிற்பது’). இதனால் தான் இந்த இடுக்கண் வந்ததோ ஏனோ.
நடந்த விடயத்துக்கு திரும்புங்கால், அந்த நபர் கேட்டபொழுது அவரும் நானும் கூட என் நண்பர்களுடன் புதியதோர் வீட்டுக்கு சென்றால் அனைவருக்கும் நல்லதென்றே தோன்றியது. (இ.கு: அனைவருக்கும் மாத வாடகை குறையும், புதிய நபருக்கும் எனக்கும் நல்லதென்றே தோன்றியதாலே). அவரிடம் இதை நான் கூறியபொழுது காத்திருந்தது அடுத்த சோதனை. இன்னொரு மாணவரும் வருகிறதாகவும் அவருக்கும் புதிய வீட்டில் இடம் இருக்குமா/நண்பர் சார்பாக யாரையாவது கேட்க முடியுமா ? என்று கேட்டார் அவர். என்ன செய்வேன் நான் ? நிலைமையை அவரிடம் கூறினேன்.(ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கும், உங்களுக்கு சம்மதம் என்றால் மட்டுமே ஒப்புக்கொள்ளவும்.)
அவர் ஒப்புக்கொண்டதால் நானும் எனது நண்பர்களும் புதிய வீடு ஒன்று பார்த்து குத்தகை உடன்படிக்கையில் கைஎழுத்திட்டோம். திடீரென்று அவருக்கு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை, மற்றும் ஒரு நண்பர் வருவதாகவும் தான் அவருடன் தான் தங்கப்போவதாக தெரிவித்தார். நண்பருக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற விழையும் அவர் குணத்தை மதிக்கிறேன். ஆனால் என்னிடம் அதை தெரிவித்திருந்தால் நான் முன்னமே ஓர் ஏற்பாடு செய்திருக்க மாட்டேனா ? தனக்கு ஒரு இடம் வேண்டும் என்ற அவரது முன்னெச்சரிக்கை எண்ணத்தை/நண்பருக்கு கொடுத்த வாக்கை காக்க விழையும் அவருடைய குணத்தை அவருடைய இந்த குணம் மறைத்து விடுகிறது என் கண்ணோட்டத்தில்.
நான் கற்ற பாடம்: முன் பின் அறியாத, மூன்றாம் நபருக்கு உதவ விழைவது நல்ல எண்ணமாகவே இருந்தாலும், முடிந்த வரையில் பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் செய்யாமல் இருப்பது நல்லது(இது என் நிலைமையினால் உண்டான கருத்து, அனைவருக்கும் பொருந்தாது 😀 )
கடைசி வரிகள் – “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்தில் ரஜினிகந்த்திடம் அவர் முதலாளி கூறும் “கடவுள் ஒருவனை அதிகமாக சோதிக்கிறார் என்றால் அவனை எதோ ஒரு பெரிய விடயத்திற்க்காக தயார் செய்கிறார் என்று அருத்தம்” மற்றும் அரச கட்டளை திரைப்படத்தில் வரும் கவிஞர் முத்துக்கூத்தனின் “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” ஆகிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. 🙂
பி.கு: அடுத்த பதிவு – நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முறை
நீங்கள் சொல்வது மிக உண்மை.பணவிஷயத்தில் கொஞ்சம் கறாராக இருப்பதில் தவரில்லை.கறாராக இல்லாமல் நட்பைத்தொலைப்பது வேதனைக்குரிய விஷயம்.
ஆதிப்பகையே மேல் அந்தப்பகையை விட என்று பெரியவர்கள் இதைச்சொல்வார்கள்.
அனுபவத்தில் கண்ட
கமலா
நண்பா, உனக்கா இந்த நிலை? கொடுமையடா! ஏமாற்றியவன் தமிழனா? அவன் வாடகையை சேர்த்து நீ கட்டுகிறாயா அல்லது வேறு வழியேதும் கிட்டியதா? நல்லோருக்கு விறவில் நல்லதே கிட்டும், கலங்காதே தோழா!
ஜி-டாக்கில் சந்திப்போம்…
– பாலாஜி
@கல்யாணகமலா (இதுதானே உங்கள் பெயரை நீங்கள் பயன்படுத்தும் முறை ? தவறு எனில் மன்னிக்கவும்.) – தாங்கள் சொல்வது மிக சரி. என்னுடைய பிரச்சினையே இதுதான். பலருக்கு பணம் ஒரு பொருட்டல்ல, ஆனால் அவர்களுடன் வாழும் எனக்கோ ஒவ்வொரு ரூபாயும் போற்றப்படவேண்டியது. இப்படியே போனால் ஔவையார்’இன் “ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்ற ஆத்திச்சூடி’க்கு ஒரு உதாரணம் ஆகிவிடுவேன் போலிருக்கிறது 😀
@பாலாஜி: நண்பா, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. ஆம் இப்போதைக்கு நான் தான் கட்டவேண்டும். பார்ப்போம் எதாவது மாறுகிறதா என்று.
பி.கு: இந்த இடத்தில் தமிழன்/வேறொருவன் என்பது எப்படி வருகிறதென்று எனக்கு புரியவில்லை. ஒருவன் எந்த மொழி/இனம்/இடத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் செய்தது தவறென்றால் அது தவறுதானே 😉
really a tough situation dear sriram …. i really understand your situation though am not a person standing in ur shoes. Students have to think a lot on monetary aspects here in the States … and situations like this is really a big mess both to mind n heart !! tat too with lease n all others its gonna be a tough thing … i hope ur issue is resolved by now – tis been quite some time … we better stay a little away from ANYBODY on monetary aspects …. 🙂
Vasanth